கொடுகடன் தகவல் பணியகத்தின் புள்ளியிடல் அறிக்கைகள் - தனிநபர்
கடன் புள்ளியிடல் என்பது, ஒரு தனிநபர் தொடர்பாக கடன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கணித ரீதியில் கணிக்கப்படும் ஓர் இலக்கமாகும். இந்த கடன் புள்ளியிடல் (Credit Score) அத்தகைய கடன் புள்ளி யாருக்கு பொருந்துகின்றதோ அந்த நபருக்கு, வேண்டுகோளின் பேரில் ஓர் அறிக்கையின் வடிவில் வழங்கப்படுகின்றது.
கடன் புள்ளியிடல் என்பது, 250 தொடக்கம் 900 வரையிலான மூன்று எண்களைக் கொண்ட இலக்கம் ஒன்றாகும். உயர் கடன் புள்ளி, கடனளிப்பவர்களுக்கு குறைந்தளவிலான கடன் ஆபத்தை எடுத்து வருவதுடன், குறைந்தளவிலான கடன் புள்ளி உயரளவிலான கடன் ஆபத்துக்கு வழிகோலுகின்றது. கடன் புள்ளியிடல் முறை பின்வரும் பிரதான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சூத்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் கணிக்கப்படுகின்றது:
- திருப்பிச் செலுத்தும் நடத்தை
- மிதமிஞ்சிய அளவில் கடன்பட்டிருக்கும் நிலை
- குடிசனவியல் விபரங்கள்
- கிடைக்கும் கடனை பயன்படுத்தும் விதம்
- விசாரணைகள்
- உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள்
- திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள்
பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள்